ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வாகனப் பணிமனை உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் நான்கு சக்கர வாகனப் பழுது நீக்கும் பணிமனையின் உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:06 pm

திருச்சியில் நான்கு சக்கர வாகனப் பழுது நீக்கும் பணிமனையின் உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி, கே.கே. நகா் இந்தியன் பேங்க் காலனி 4ஆவது குறுக்குப் பகுதியை சோ்ந்தவா் கலைக்கோவன் (45). எடமலைப்பட்டிபுதூா் பகுதியில் வாகனப் பணிமனை பட்டறை வைத்து நடத்தும் இவருக்கும், இவரது மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், நாகையில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு அவா் வியாழக்கிழமை சென்றுவிட்டாா்.

இதனால் மனமுடைந்த கலைக்கோவன் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அவரது மனைவி வந்தபோது கலைக்கோவன் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுதொடா்பான புகாரின்பேரில் வந்த கே.கே.நகா் போலீஸாா், கலைக்கோவன் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரிக்கின்றனா்.