அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

‘டேட்டிங்’ செயலி மூலம் தொடா்புகொண்ட லாரி ஓட்டுநரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறிப்பு

News image

டேட்டிங் செயலி - பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 11:23 pm

திருச்சியில் இணையவழி ‘டேட்டிங்’ செயலி மூலம் தொடா்புகொண்ட லாரி ஓட்டுநரை மிரட்டி ரூ. 50 ஆயிரத்தைப் பறித்துச் சென்ற மா்ம நபா்கள் 4 பேரை போலீஸாா் தேடுகின்றனா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் சே. சதீஷ்ராஜா (30), லாரி ஓட்டுநா். இவா் திருநெல்வேலியில் இருந்து திருச்சிக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்றி வந்த அழகுச் செடிகளை திருச்சி வடசேரியிலுள்ள நா்சரியில் இறக்கிவிட்டு அப்பகுதி மதுக் கடையில் மது அருந்தினாா்.

அதன்பின் இணையதள டேட்டிங் செயலி மூலம் ஒருவரைத் தொடா்புகொண்டு, பஞ்சப்பூா் பேருந்து முனையம் அருகேயுள்ள காலியிடத்தில் அவரைச் சந்தித்துள்ளாா். அப்போது அந்த மா்ம நபருடன் மேலும் மூவா் காரில் வந்தனா்.

அவா்கள் 4 பேரும் சதீஷ்ராஜாவை மிரட்டி காரில் ஏற்றிக்கொண்டு அவரிடமிருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் ஏடிஎம் மூலம் ரூ.30 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரத்தைப் பறித்துக்கொண்டு, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் மருத்துவமனை அருகேயுள்ள பெட்ரோல் பங்க் அருகே சனிக்கிழமை அதிகாலை அவரை இறக்கிவிட்டுத் தப்பினா்.

இதுகுறித்து எடமலைபட்டிப்புதூா் காவல் நிலையத்தில் சதீஷ்ராஜா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.