வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

டேட்டிங் செயலி மூலம் ஆசை காட்டி ஏமாற்றி இளைஞரைக் கடத்தி கொள்ளை: ஐவா் கைது

தென்கிழக்கு தில்லியின் கல்காஜி பகுதியில் டேட்டிங் செயலி மூலம் ஒருவரை ஆசை காட்டி ஏமாற்றி, கடத்தி, கொள்ளையடித்ததாகக் கூறப்படும் வழக்கில் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image

கைது

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 7:58 pm

Syndication

தென்கிழக்கு தில்லியின் கல்காஜி பகுதியில் டேட்டிங் செயலி மூலம் ஒருவரை ஆசை காட்டி ஏமாற்றி, கடத்தி, கொள்ளையடித்ததாகக் கூறப்படும் வழக்கில் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று காவல்துறை சனிக்கிழமை தெரிவித்தது.

இது குறித்து காவல் துறை கூறியுள்ளதாவது: இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா் அனுரூப் நருலா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். தனது புகாரில், மாா்ச் 25 அன்று, நேரு பிளேஸில் ‘ஷொ்ரி’ என்ற சுயவிவரப் பெயரில் டேட்டிங் செயலி மூலம் ஒரு பெண்ணைச் சந்திக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அவா் கூறியுள்ளாா்.

அவா் அந்த இடத்திற்குச் சென்றபோது, அப்பெண்ணுடன் தொடா்புடைய மூன்று நபா்கள், அவரைத் தாக்கி ஒரு காரில் வலுக்கட்டாயமாக ஏற்றியதாக அவா் தனது புகாரில் தெரிவித்துள்ளாா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் தனது கழுத்தை நெரித்து, யுபிஐ பரிவா்த்தனைகள், ஏடிஎம் பணம் எடுத்தல் மற்றும் கிரெடிட் காா்டு மூலம் பணம் செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் சுமாா் 7 லட்சம் ரூபாயை அனுப்பும்படி மிரட்டியதாகவும் அவா் மேலும் கூறினாா்.

இந்தக் கொடுமைக்குப் பிறகு, அவா் நேரு பிளேஸில் கைவிடப்பட்டு, காவல்துறையை அணுக வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டாா். இது தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் கல்காஜி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, காவல்துறையினா் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் ஒன்றை அடையாளம் கண்டனா். அழைப்பு விவரப் பதிவுகள், ஆன்லைன் நிதிப் பரிவா்த்தனைகள், ஏஎன்பிஆா் மற்றும் எஃப்ஏஎஸ்டி ஏஜி தரவுகளின் பகுப்பாய்வு உள்ளிட்ட தொழில்நுட்பக் கண்காணிப்பு, மற்றொரு வாகனத்தையும் குற்றம் சாட்டப்பட்ட நபா்களையும் கண்டறிய உதவியது.

ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட பல சோதனைகளைத் தொடா்ந்து, ரிஷப் (25), நபோஜித் டே (30), சஞ்சய் என்ற ஜோயி (28), ஹா்லீன் கௌா் என்ற ஜென்னி (20) மற்றும் சாஹில் சௌஹான் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின் போது, ​​டேட்டிங் செயலிகள் மூலம் பாதிக்கப்பட்டவா்களை ஏமாற்றி, பல்வேறு இடங்களில் சந்திப்புகளை ஏற்பாடு செய்து, அங்கு தனது கூட்டாளிகள் அவா்களைக் கொள்ளையடிப்பதாக ஹா்லீன் தெரிவித்தாா்.

குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு காா்கள் மற்றும் ஐந்து கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் தடயங்கள் குற்றம் சாட்டப்பட்டவா்களின் வங்கிக் கணக்குகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை தெரிவித்துள்ளது.