பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைகேரள முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்! வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு! விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!
/

தில்லியில் போலி வர்த்தக செயலி மூலம் ரூ. 45 லட்சம் மோசடி! வங்கி உதவி மேலாளர் உள்பட 3 பேர் கைது!

தில்லியில் போலி வர்த்தக செயலி மூலம் ரூ. 45 லட்சம் மோசடி செய்த கும்பலைக் காவல்துறை கைது செய்தது குறித்து...

News image

கைது நடவடிக்கை - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 11:08 am

தில்லியில் போலி வர்த்தக செயலி மூலம் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவரிடம் இருந்து ரூ. 45 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் கும்பலின் செயலைக் காவல்துறை முறியடித்து, 3 பேரைக் கைது செய்துள்ளனர்.

சட்டப்பூர்வமான வர்த்தக தளம் போல வடிவமைத்த ஒரு செயலியின் மூலம், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி தன்னிடம் இருந்து ரூ.45.33 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, “மோசடிக்காரர்கள், பிரபலமான முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் போல நடித்து, அதிக மற்றும் உறுதியான வருமானம் தருவதாக அந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்கு வாக்குறுதியளித்தனர்.

பாதிக்கப்பட்டவரை ஐபிஓ-க்களில் முதலீடு செய்ய ஆசை காட்டினர். அவரது நம்பிக்கையைப் பெறுவதற்காக, குற்றவாளிகள் முறையாக வடிவமைக்கப்பட்ட ஒரு போலிச் செயலியையும், இணையதளத்தையும் பயன்படுத்தினர்” என்று காவல்துறை தெரிவித்தனர்.

முதல்கட்ட விசாரணையில் உத்தரகண்டின் உதம் சிங் நகரைச் சேர்ந்த கபில் பெயின் (25), மனோஜ் சர்மா (26) மற்றும் வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்தவரான கமல் பாண்டே (24) ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களை அடையாளம் காணவும், பணப் பரிவர்த்தனைப் பாதையைக் கண்டறியவும் மற்றும் இதுபோன்ற மோசடித் தளங்கள் மூலம் கூடுதலாக பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, 3 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேரைக் கைது செய்ததன் மூலம் கைது எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In Delhi, the police have foiled the operations of a gang alleged to have defrauded a retired government official of over ₹45 lakhs using a fake trading app, and have arrested three individuals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.