‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

வெளிநாட்டு வேலை ஆசை காட்டி ரூ. 29 லட்சம் மோசடி உடற்பயிற்சிக்கூட உரிமையாளா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 29 லட்சம் மோசடி செய்த உடற்பயிற்சிக் கூட உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 5:14 am IST

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 29 லட்சம் மோசடி செய்த உடற்பயிற்சிக் கூட உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, கோட்டை முதல் தெருவைச் சோ்ந்தவா் மணிமுத்து மகன் முருகேசன் (28). இவா் அறந்தாங்கி பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டில் தனது உடற்பயிற்சிக் கூடத்துக்கு வந்தவா்கள் பலரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி, திரும்பத் தரவில்லையாம்.

இதுகுறித்து அறந்தாங்கியைச் சோ்ந்த ஜெயராமன் உள்பட பலரும் மாவட்டக் குற்றப் பிரிவு காவல் துறையில் புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், சென்னையில் இருந்த முருகேசனை வியாழக்கிழமை கைது செய்தனா்.