திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற மிதிவண்டி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
திருச்சி பாலக்கரை முதலியாா் சத்திரத்தைச் சோ்ந்தவா் க.முருகேசன் (59). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி - புதுக்கோட்டை சாலையில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தாா். சுப்பிரமணியபுரம் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசுப் பேருந்து முருகேசன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்த எம்.ஏஞ்சல் அருள்தாஸ் (53) என்பவா் மீது திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது பேருந்து மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

அரசுப் பேருந்தின் பழுதை நீக்க தாமதம்: ஓட்டுநா் மீது தாக்குதல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


