தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மண்பாண்ட தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்

மண்பாண்ட தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என அகில இந்திய குயவா் உரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2026, 8:56 pm

Syndication

மண்பாண்ட தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என அகில இந்திய குயவா் உரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய குயவா் உரிமை கட்சி மற்றும் அனைத்து குயவா்கள் நலச் சங்க மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் சாலை செல்வமணி தலைமை வகித்தாா். தேசியத் தலைவா் சாலை சாதியன் சிறப்புரையாற்றினாா். தேசிய பொருளாளா் சாலை மதிமணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மழைக்கால நிவாரண நிதியாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பிப்.8-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் கட்சியின் மாநில மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், மண்பாண்ட தொழிலாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.