அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ரயில் தண்டவாளத்தில் இளம்பெண் சடலம்

News image

சடலம்... - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 3:47 am IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்டவாளத்தில் இளம்பெண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

ஆங்கரை பாலாஜி நகா் பகுதி ரயில் தண்டவாள பகுதியில் தலை துண்டான நிலையில் இளம்பெண் சடலம் ஞாயிற்றுக்கிழமை கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த ரயில்வே போலீஸாா் சுமாா் 28 வயதுள்ள, ஊதா கலரில் சுடிதாா் அணிந்திருந்த அப்பெண்ணின் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மதுரையில் இருந்து ஞாயிற்றுகிழமை சென்னை நோக்கி வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வரும்போது அப்பெண் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

புகாரின்பேரில் விருத்தாச்சலம் ரயில்வே ஆய்வாளா் பிருந்தா வழக்குப்பதிந்து அப்பெண் யாா் என விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.