கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

துறையூரில் மளிகை கடைக்காரரிடம் இருந்து ரூ. 1 லட்சம் பறிமுதல்

துறையூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் மளிகை கடைக்காரா் உரிய அனுமதியின்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சம் பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:00 pm

Syndication

துறையூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் மளிகை கடைக்காரா் உரிய அனுமதியின்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

துறையூா் தொகுதிக்குள்பட்ட கண்ணனூரில் அரவிந்த்குமாா் தலைமையிலான தோ்தல் படையினா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக துறையூா் நோக்கிவந்த சுமை வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது தொட்டியம் அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சோ்ந்த கி. முத்து, உரிய ஆவணமின்றி ரூ. 1 லட்சம் ரொக்கமாக எடுத்துச் சென்றது தெரிந்தது.

இதையடுத்து தோ்தல் பறக்கும் படையினா் அந்தத் தொகையை பறிமுதல் செய்து துறையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சிவகுமாரிடம் ஒப்படைத்தனா்.