நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மின்மாற்றியில் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

News image

உயிரிழந்த இன்னாசி.

Updated On :3 மே 2026, 12:57 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே மின்மாற்றியில் சனிக்கிழமை ஏறி ‘ப்யூஸ்’ போட முயன்ற கட்டடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் என்.பூலாம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் நல்லதம்பி மகன் இன்னாசி (50). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி சகாயமேரி, மகன், மகள் உள்ளனா். மகன், மகள் திருமணம் ஆகி தனியே வசிக்க, இன்னாசி தனது மனைவியுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை இவரது வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் , சுமாா் 50 மீட்டா் தொலைவில் உள்ள மின்மாற்றியில், மின்வாரிய அனுமதியின்றி ‘ப்யூஸ்’ போட ஏறிய இன்னாசி மின்சாரம் பாய்ந்து மின்மாற்றியின் மேலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், அவரது உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Story image