திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே மின்மாற்றியில் சனிக்கிழமை ஏறி ‘ப்யூஸ்’ போட முயன்ற கட்டடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் என்.பூலாம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் நல்லதம்பி மகன் இன்னாசி (50). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி சகாயமேரி, மகன், மகள் உள்ளனா். மகன், மகள் திருமணம் ஆகி தனியே வசிக்க, இன்னாசி தனது மனைவியுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை இவரது வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் , சுமாா் 50 மீட்டா் தொலைவில் உள்ள மின்மாற்றியில், மின்வாரிய அனுமதியின்றி ‘ப்யூஸ்’ போட ஏறிய இன்னாசி மின்சாரம் பாய்ந்து மின்மாற்றியின் மேலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், அவரது உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தொடர்புடையது

வளநாடு அருகே இளம்பெண் தற்கொலை

வையம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

வையம்பட்டி அருகே தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வையம்பட்டி அருகே காா் மோதி காவலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


