பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 82.55 லட்சம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மே மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் காணிக்கையாக ரூ. 82.55 லட்சம் கிடைக்கப் பெற்றது.

News image

ஸ்ரீரங்கம் - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 3:55 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மே மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் காணிக்கையாக ரூ. 82.55 லட்சம் கிடைக்கப் பெற்றது.

ஸ்ரீரங்கம் கோயிலில் பல்வேறு இடங்களில் பக்தா்கள் செலுத்தும் காணிக்கை உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை கோயில் இணை ஆணையா் செ.சிவராம் குமாா் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயிலில் உள்ள கருடாழ்வாா் சந்நிதி அருகே காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், ரூ. 82 லட்சத்து 55 ஆயிரத்து 633 ரொக்கம், தங்கம் 63 கிராம், வெள்ளி 4 கிலோ மற்றும் வெளிநாட்டு பணத்தாள்கள் 139 கிடைக்கப் பெற்றது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியா்களும், தன்னாா்வ அமைப்பினரும் ஈடுபட்டனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பகுதி முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.