திமுக தெருமுனை பிரசாரம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் மற்றும் கீழப்பழுவூரில் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.


அரியலூர் மாவட்டம் திருமானூர் மற்றும் கீழப்பழுவூரில் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர்(மே)அசோக சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராஜன், துணை அமைப்பாளர் முத்தையா பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சுபா சந்திரசேகர், மாவட்ட துணைச் செயலர் தனபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டத்தில், தலைமை கழகப் பேச்சாளர் கவிதைபித்தன் பங்கேற்றுப் பேசினார். முன்னதாக இளைஞரணி அமைப்பாளர் முருகேசன் வரவேற்றார். இதேபோல், திருமானூரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர்(கி)கென்னடி தலைமை வகித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...