அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 43 லட்சத்து 50 ஆயிரத்தில் கட்டப்பட்ட முதியோர் சிகிச்சைக்கான மருத்துவப் பிரிவு,இயன்முறை சிகிச்சை பிரிவை அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் தெரிவித்தது: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்துப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக முதியோர் சிகிச்சைக்கென தனியாக உள்நோயாளிகள் பிரிவு மற்றும் இயன்முறை சிகிச்சை பிரிவு சுமார் ரூ. 23.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடடத்தில் 20 தீவிர சிகிச்சை மற்றும் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்ட முதியோருக்கு படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவுக்கென தனியாக ஒரு மருத்துவர், ஓர் இயன்முறை சிகிச்சையாளர், 4 செவிலியர், 4 பல்நோக்கு பணியாளர் நியமிக்கப்படவுள்ளனர். மேலும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் கருவிகள் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்து மேல் சிகிச்சையும் இங்கே வழங்கப்படவுள்ளது என்றார் அவர். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜி.கே. லோகேஷ்வரி,பொது சுகாதாரத் துறை இயக்குநர் ஹேமசந்த்காந்தி, தலைமை மருத்துவர் ரமேஷ், மருத்துவர் முகமது ரியாஸ் மற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொது கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மக்கள் திடீர் சாலை மறியல்!

ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த ஷ்ரேயாஸ் ஐயர்!
தனுஷ் - 55 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


