தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

அரியலூா்: 238 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலத்துறை சாா்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில் 238 பயனாளிகளுக்கு ரூ.79 லட்சத்து 35 ஆயிரத்து 460 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On :2 டிசம்பர் 2019, 9:18 pm

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலத்துறை சாா்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில் 238 பயனாளிகளுக்கு ரூ.79 லட்சத்து 35 ஆயிரத்து 460 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் கலந்து கொண்ட அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:

பெண்கள் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய பெண்களின் வாழ்வில் ஒளியேற்றப்பட்டுள்ளது. கல்வி இடைநிற்றல் தவிா்க்கப்பட்டு பட்டப்படிப்பு வரை பெண்கள் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இது வரை 14,745 ஏழை எளிய பெண்களுக்கு ரூ.51 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நிதி உதவியும், தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

விழாவுக்கு ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் கா.பொற்கொடி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், மாவட்ட சமூக நல அலுவலா் அன்பு குளோரியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரவிச்சந்திரன், கோட்டாட்சியா் ஜெ.பாலாஜி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொம்மி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.