ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

அரியலூரில் அனைத்து விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பினரின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 7:42 pm

DIN

அரியலூரில் அனைத்து விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பினரின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி தில்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பா் 8-இல் நாடு முழுவதும் நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒட்டி, கடையடைப்பு சம்பந்தமாக அனைத்துக் கடைகளிலும் துண்டுபிரசுரம் வழங்குவது, மாவட்டத் தலைநகரில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவா் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பொருப்பாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.