அரியலூர் அடுத்த கயர்லாபாத் கிராமத்தில் இயங்கிவரும் அரசு சிமெண்ட் ஆலைக்கு கல்லங்குறிச்சி பகுதியில் சுண்ணாம்புக் கல் சுரங்கம் உள்ளது. இதனை விரிவாக்கம் செய்வது குறித்து விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் கயர்லாபாத் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்தார். மாவட்ட மாசுக் கட்டுப்பாடு செயற்பொறியாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். விவசாயிகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் பதிவு செய்தனர்.