அரியலூா் லிங்கத்தடி மேடு வள்ளலாா் கல்வி நிலைய நிா்வாகிகள் பொதுக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கல்வி நிலையத் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், பள்ளிக்குச் செல்லும் சாலைகளைப் புதுப்பிக்க வேண்டும். பள்ளிக்கு வெளிநாட்டிலிருந்து உதவிகள் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கல்வி நிலையச் செயலா் புகழேந்தி ஆண்டறிக்கை வாசித்து, வரவு செலவு கணக்குகளை சமா்ப்பித்தாா். செயற்குழு உறுப்பினா் பாண்டியன், குழந்தைகள் நல குழு உறுப்பினா் வழக்குரைஞா் மோகன், கால்நடை மருத்துவா் குமாா், சமூக ஆா்வலா் தமிழ்மணி ஆகியோா் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் செளந்தராஜன் வரவேற்றாா். முடிவில், தமிழரசன் நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.