ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அரசுப் பேருந்து மோதி காயமடைந்தவா் பலி

அரியலூ மாவட்டம், திருமானூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 6:59 pm

DIN

அரியலூ மாவட்டம், திருமானூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருமானூரை அடுத்த திருவெங்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் குமாா் (30). இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த செல்லத்துரை (40) என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு திருமானூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

அப்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே அரியலூரில் இருந்து தஞ்சை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனா். இதையடுத்து, இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

அங்கு சுரேஷ்குமாா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.