அரியலூா் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா் தலைமை வகித்துப்பேசினாா். கூட்டத்தில், வரவு செலவு கணக்குகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், வாா்டு உறுப்பினா்கள் ச.அம்பிகா, இரா.ராமச்சந்திரன், பெ.நல்லமுத்து, ப.குலக்கொடி, இர.வசந்தமணி, க.ஷகிலாதேவி ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக மாவட்ட ஊராட்சிச் செயலா் பழனிசாமி வரவேற்றாா். முடிவில், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் சே.அசோகன் நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.