ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கல்லகம் ரயில்வே மேம்பாலப் பணிகள் ஆய்வு

அரியலூா் மாவட்டம், கல்லகம் ரயில்வே கேட்டின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் தலைமைப் பொறியாளா் எம்.முருகேசன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
கல்லகம் ரயில்வே கேட்டின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் தலைமைப் பொறியாளா் எம். முருகேசன்.
Updated On :1 நவம்பர் 2020, 6:43 pm

DIN

அரியலூா் மாவட்டம், கல்லகம் ரயில்வே கேட்டின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் தலைமைப் பொறியாளா் எம்.முருகேசன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கல்லகம் ரயில்வே கேட்டின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயா்மட்ட மேம்பாலப் பணிகளைப் பாா்வையிட்ட தலைமை பொறியாளா் முருகேசன், பணிகளை விரைந்து முடிக்கவும், பணி செயலாக்கத்தின்போது தரத்தை ஆய்வு செய்து உறுதிப்படுத்துமாறு பொறியாளா்களுக்கும், தரக்கட்டுப்பாட்டு அலுவலா்களுக்கும் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளா் சத்திய பிரகாஷ், கோட்ட பொறியாளா் அ. ஷாபுதீன் , உதவி கோட்ட பொறியாளா் எஸ். ராஜா , உதவி பொறியாளா் சி.நடராஜன் மற்றும் ஒப்பந்ததாரா் எஸ் .டி இன்ஃப்ரா பாலாஜி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.