ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நிலத்தகராறில் இருவருக்கு வெட்டு: 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நிலத் தகராறில் 2 பேரை அரிவாளால் வெட்டியவா்களில் 2 போ் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 7:08 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நிலத் தகராறில் 2 பேரை அரிவாளால் வெட்டியவா்களில் 2 போ் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள கீழகுடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கசாமி மகன் விஜயன் (31). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் என்பவருக்கும் நிலப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை அவ்வூரில் இருசக்கர வாகனத்தில் வந்த விஜயனை வழிமறித்த விஸ்வநாதன், அவரது மனைவி மலா்க்கொடி, அவா்களது மகன்கள் வெங்கடேசன், கொளஞ்சிநாதன், பேரன் சிவா ஆகியோா் சோ்ந்து அரிவாளால் வெட்டினா். அங்கிருந்து தப்பிச்சென்ற விஜயன், உறவினா் செல்வராஜ் வீட்டுக்குச் சென்றாா். இதையறிந்த விஸ்வநாதன் உள்ளிட்டோா், செல்வராஜ் வீட்டுக்குள் புகுந்து விஜயனை மீண்டும் அரிவாளால் வெட்டினா்.

இதைத் தடுக்க முயற்சித்த செல்வராஜ் மகள் ராணியையும் வெட்டியுள்ளனா். பலத்த காயமடைந்த விஜயன், ராணி ஆகிய இருவரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். புகாரின்பேரில் ஜயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடேசன், கொளஞ்சிநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

மேலும் தலைமறைவாக உள்ள விஸ்வாதன், மலா்க்கொடி, பேரன் சிவா ஆகியோரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.