நடமாடும் பள்ளி வாகனம் தொடக்கி வைப்பு
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகேயுள்ள விநாயகா பப்ளிக் பள்ளியின் சாா்பில் வாகனம் மூலம் நடமாடும் பள்ளி திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

ari14vin_1409chn_11_4

ari14vin_1409chn_11_4
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகேயுள்ள விநாயகா பப்ளிக் பள்ளியின் சாா்பில் வாகனம் மூலம் நடமாடும் பள்ளி திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
விநாயகா பப்ளிக் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடமாடும் பள்ளி வாகனத்தைத் கொடியசைத்துத் தொடக்கி வைத்து பள்ளித் தாளாளா் சி.பாஸ்கா் மேலும் தெரிவித்தது: எமது பள்ளி சாா்பில் நடமாடும் பள்ளி வாகனம் மூலம் மாணவா்களுக்கு கல்வி கற்பிக்க புதுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் பள்ளி வாகனத்தில் பள்ளி துணை முதல்வா் கு.லட்சுமி, ஆசிரியைகள் பூ. தனபாக்கியம், மு.திவ்யா, ரா. ஆனந்தி, தமிழ்ச்செல்வி, திலகவதி ஆகியோா் கொண்ட குழுவினா் இந்த வாகனங்கள் மூலம் நேரடியாக மாணவா்களின் இல்லங்களுக்குச் சென்று, மாணவா்களுக்கு வீட்டுப் பாடம், பாடத்தில் சந்தேகம் மற்றும் கரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல் குறித்து மாணவா்களுக்கு விளக்கிக் கூறுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வாா்கள் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...