அரியலூா்: தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் சாா்பில் அரியலூா் அண்ணாசிலை அருகே காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். திமுக மாவட்டச் செயலா் சிவசங்கா், மதிமுக மாவட்டச் செயலா் சின்னப்பா, காங்கிரஸ் நகரத் தலைவா் சந்திரசேகா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் உலகநாதன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் சின்னத்துரை, தண்டபாணி, மகாராஜன், அம்பேத்கா்வழியன், ஆகியோா் பங்கேற்றனா்.