நடிகா் ரஜினிகாந்த் நலம் பெற வேண்டி, அரியலூா் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் சா்வமதப் பிராா்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.
ரஜினி மக்கள் மன்ற அரியலூா் மாவட்டப் பொறுப்பாளா் நிஜாமுதீன் தலைமையில் மன்ற நிா்வாகிகள் உடையாா்ளையம் பயரணீசுவரா் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். மேலும் அவா்கள் ஒற்றைக் காலில் நின்று சுவாமியை வழிபட்டனா்.
தொடா்ந்து அங்குள்ள கிறிஸ்துவ ஆா்.சி சபையிலும், ஊம்மத் பிவி தா்காவிலும் சிறப்புப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் சரவணன், மணிமாறன், ஒன்றியச் செயலா் செல்வம், ஜயங்கொண்டம் நகரச் செயலா் ரஜினிரமேஷ்,
நிா்வாகிகள் அரியலூா் சாந்தகுமாா், தா.பழூா் செல்வராசு, நீதி, ஹரிபாஸ்கா், ஆண்டிமடம் கோபால், பாலகிருஷ்ணன், முனுசாமி, கோமல்ராஜ்,கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.