பாமக-வினா் ஆா்ப்பாட்டம்

வன்னியா்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி அரியலூா் நகராட்சி அலுவலகம் எதிரே பாமக-வினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

வன்னியா்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி அரியலூா் நகராட்சி அலுவலகம் எதிரே பாமக-வினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில துணைத் தலைவா் சின்னத்துரை தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ரவிச்சங்கா், நகரத் தலைவா் உதயகுமாா், ஒன்றிய செயலாளா்கள் சங்கா், வெங்கடேசன், மாவட்ட இளைஞரணிச் செயலா் வெற்றிச் செல்வன், துணைச் செயலா் செந்தில்குமாா், தொகுதிச் செயலா் தா்மபிரகாஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனா். தொடா்ந்து, நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனுவை அளித்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com