ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

விவசாயம், கலைகளைக் காக்க கரகாட்டம் ஆடிய படி நடவு நட்ட மாற்றுத்திறனாளி மாணவி

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே விவசாயம் மற்றும் கலையினை காக்க வலியுறுத்தும் வகையில் கரகாட்டம் ஆடியபடி மாணவி ஒருவர் நடவு வயலில் இறங்கி நடவு நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

News image
கரகாட்டம் ஆடிய படி வயலில் நடவு நடும் மாணவி கிருஷ்ணவேணி
Updated On :15 ஜனவரி 2021, 12:58 pm

DIN

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே விவசாயம் மற்றும் கலையினை காக்க வலியுறுத்தும் வகையில் கரகாட்டம் ஆடியபடி மாணவி ஒருவர் நடவு வயலில் இறங்கி நடவு நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பெரியதிருக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், மாலா தம்பதியினரின் மகள் கிருஷ்ணவேணி(15). வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவியான இவர், ஜெயங்கொண்டத்தில் உள்ள காதுகேளாதோர் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், விவசாயம் காக்க வேண்டும், கலைகள் காக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண்டே வயலில் இறங்கி வெள்ளிக்கிழமை நாற்றுகளை நட்டார்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கரகாட்டம் ஆடிக்கொண்டே நடவு நட்டதை விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். தொடர்ந்து மாணவியை பலரும் பாராட்டினர்.

மாணவியின் தந்தை பாண்டியன் அரசு வாகன ஓட்டுநராகவும், தாய் மாலா காதுகேளாதோர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இதுகுறித்து மாணவியின் மாலா கூறுகையில், விவசாயம், கரகாட்டம் உள்ளிட்ட கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு நாட்களாக வயலில் இறங்கி இந்த பயிற்சியினை மேற்கொண்டுள்ளார். மேலும், இந்தியா புக்ஆப் ரெக்கார்டு பெறவும் இந்த முயற்சி செய்துள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.