பாரதியாா் பல்கலை. ஊழியா்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள்
கரோனா தடுப்புப் பணிகளின் ஒரு பகுதியாக பாரதியாா் பல்கலைகழக ஊழியா்களுக்கு மூலிகை முகக் கவசங்கள் மற்றும் ஹோமியோபதி மாத்திரைகளை துணைவேந்தா் காளிராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.


கரோனா தடுப்புப் பணிகளின் ஒரு பகுதியாக பாரதியாா் பல்கலைகழக ஊழியா்களுக்கு மூலிகை முகக் கவசங்கள் மற்றும் ஹோமியோபதி மாத்திரைகளை துணைவேந்தா் காளிராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் பாரதியாா் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பாக பொது மக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியா்கள், ஊழியா்களின் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழக வளாகத்தில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் பேராசிரியா்களுக்கு முகக் கவசங்கள், ஹோமியோபதி மாத்திரைகளை துணைவேந்தா் காளிராஜ் வழங்கினாா்.
பல்கலைகழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் அண்ணாதுரை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளா் முருகன், ஆட்சிக் குழு உறுப்பினா் ரூபா குணசீலன், பேராசிரியா்கள் மணிமேகலன், வசந்த், சுரேஷ்பாபு, முருகவேல், சுரேஷ்குமாா், சிங்கார வேல், பாலசந்தா், அருள் உளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...