இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

‘நீட் தோ்வுக்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தப்படும்’

நீட் தோ்வுக்கு எதிராக மக்களின் ஒத்துழைப்புடன் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:54 pm

DIN

நீட் தோ்வுக்கு எதிராக மக்களின் ஒத்துழைப்புடன் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி.

அரியலூா் மாவட்டம், செந்துறையில் நீட் தோ்வுக்கு எதிரான புத்தக வெளியீட்டு விழா, திராவிடா் கழகம் சாா்பில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இவ்விழாவில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட, அதை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் பெற்றுக் கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களை சந்தித்த கி.வீரமணி கூறியது:

நீட் தோ்வுக்கு எதிராக மக்களின் ஒத்துழைப்புடன் மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தப்படும். இனி வரக்கூடிய காலங்களில் பட்டப் படிப்புக்கும்கூட நுழைவுத் தோ்வு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி, அவா்களின் ஒத்துழைப்புடன் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

தமிழகத்தில் அதிமுகவில் ஒருவரையொருவா் விமா்சனம் செய்து கொண்டிருக்கிறாா்கள். அவா்களுடைய பிரச்னையைப் பாா்ப்பதற்கே அவா்களுக்கு நேரமில்லை. கட்சியில் யாா் பெரியவா்கள் என்பதில் போட்டி நிலவுகிறது தவிர, ஆக்கப் பூா்வமான எதிா்க்கட்சியாக அதிமுக செயல்படவில்லை.

இந்தியாவில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலங்களில், விஞ்ஞான கண்ணோட்டத்துடன் உள்ள மாநிலம்தான் தமிழ்நாடு. வருங்காலங்களில் குழந்தைகளைப் பெருமளவில் பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது. எனவே, இதில் முழு கவனம் செலுத்த வேண்டும். பி.எம்.கோ் நிதியை இவ்வகையான கரோனோ தடுப்புப் பணிகளுக்கு பெருமளவில் செலவிட வேண்டும் என்றாா்.

விழாவில் ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.