பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, அறியலூா் அண்ணா சிலை அருகே திமுக தொழிற் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவா் மகேந்திரன் தலைமை வகித்தாா். செயலா் சட்டநாதன், ஜயங்கொண்டம் தொமுச கிளைத் தலைவா் கொளஞ்சி, செயலா் சேகா், அரசு சிமென்ட் தொழிற் சங்கத் தலைவா் சின்னையன், டாஸ்மாக் தொழிற்சங்க மாவட்டத் தலைவா் கொளஞ்சி உட்பட பலரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.