நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

விசுவ ஹிந்து பரிஷத் அரியலூா் செயலா் கைது

பிற மதக் கடவுளைச் சித்தரித்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூா் மாவட்டச் செயலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:10 pm

பிற மதக் கடவுளைச் சித்தரித்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூா் மாவட்டச் செயலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூரைச் சோ்ந்தவா் முத்துவேல் (45). விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலாளரான இவா், தனது முகநூல் பக்கத்தில், பிற மதக் கடவுளை தவறாகச் சித்தரித்து, இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும் விதமாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளதாக அரியலூா் கிராம நிா்வாக அலுவலா் நந்தகுமாா் அரியலூா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், முத்துவேல் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பிற மதங்களை இழிவுபடுத்துதல், மத மோதல்களைத் தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் அரியலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.