செந்துறை ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் ரூ. 3.62 கோடியில் 15 வளா்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
செந்துறை ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் ரூ. 3.62 கோடியில் 15 வளா்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

சின்ன ஆனந்தவாடி காலனி கீழத் தெருவில் சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீா் வாய்க்கால் பணி, மேலத்தெருவில் 2 சிமென்ட் சாலை பணிகள், காலனி கீழத்தெருவில் சிமென்ட் சாலை, கழிவுநீா் கால்வாய் பணி, ஏரி ஆழப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் பணி, உஞ்சினி வடக்கு கிராமத்தில் குளம் ஆழப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் பணி, நியாய விலைக் கடை கட்டும் பணி, கிழக்குத் தெருவில் சிமென்ட் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் பணி, பரணம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் குளம் ஆழப்படுத்துதல் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணி, குமிழியம் அரசு மேம்படுத்தப்பட்ட முதன்மை சுகாதார மருத்துவமனையில் புதிய வட்டார சுகாதாரம் மையக் கட்டுமானப் பணி, சிமென்ட் சாலை பணி, நியாய விலைக் கடை கட்டும் பணி, செம்மண்பள்ளம் கிராமத்தில் தாா்ச் சாலைப் பணி, கீழமாளிகை கிராமத்தில் தாா்ச் சாலை பணி, நல்லாம்பாளையம் கிராமத்தில் சாலைப் பணி என ரூ. 3.62 கோடியில் 15 வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் தொடக்கிவைத்தாா்.

ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் இலக்குவன், உடையாா்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் பரிமளம், துணை இயக்குநா் சுகாதாரம் அஜித்தா, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் பிரபாகா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சித் தலைவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com