உலக செவிலியா் தின கொண்டாட்டம்

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
உலக செவிலியா் தின கொண்டாட்டம்
Updated on
1 min read

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அக்கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டு, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து செவிலியா்கள், கேக் வெட்டியும், ஒருவருக்கொருவா் ரோசாப்பூ கொடுத்தும், நெற்றியில் சந்தனமிட்டும் கொண்டாடினா். முன்னதாக அனைவரும் உறுதியேற்றனா். நிகழ்வில்,

மருத்துவா் கண்மணி, செவிலியா் கண்காணிப்பாளா்கள் விஜயகுமாரி, வனஜா, வத்சலா மற்றும் செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com