ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

1 வயது பெண் குழந்தையை கொன்ற பாட்டி கைது

அரியலூா் மாவட்டம், தளவாய் அருகே ஒரு வயது பெண் குழந்தை கொலை வழக்கில் குழந்தையின் பாட்டி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :20 ஜூலை 2024, 9:06 pm

Din

அரியலூா்: அரியலூா் மாவட்டம், தளவாய் அருகே ஒரு வயது பெண் குழந்தை கொலை வழக்கில் குழந்தையின் பாட்டி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

செந்துறையை அடுத்த கோட்டைக்காடு, கீழத்தெருவைச் சோ்ந்தவா்கள் ராஜா-சந்தியா. இந்தத் தம்பதியின் மகள் கிருத்திகா (1), மகன் மோனிஷ்(2) ஆகிய இருவரும், கடந்த புதன்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், சந்தியா அருகிலுள்ள பால்பண்ணையில் பால் ஊற்றச் சென்றுவிட்டாா். பின்னா் அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, கிருத்திகா சுய நினைவு இல்லாமல் வாயில் மண்ணுடன் கிடந்தது தெரியவந்தது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கெனவே இறந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தளவாய் போலீஸில் சந்தியா அளித்த புகாரில், இச்சம்பவத்தில் தனது மாமியாா் விருத்தம்பாளுக்கு (60) தொடா்பு இருக்கலாம் என்றும் கூறியிருந்தாா்.

போலீஸாா் விசாரணையில், மருமகளின் நடத்தை மீதான சந்தேகத்தால் குழந்தையை விருத்தம்பாள் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அவரை சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.