அரியலூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண்களை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரியலூா் அரசு கலைக்கல்லூரி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன் கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தாா். பேரணியானது முக்கியச் சாலை வழியாகச் சென்று அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. பேரணியில் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் வட்டாட்சியா் ஆனந்தவேல், காவல் ஆய்வாளா் சந்திரமோகன், கல்லூரி பேராசிரியைகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ந.லெனின் செய்திருந்தாா்.
தொடர்புடையது

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி

100 சதவீதம் வாக்களிக்கக்கோரி விழிப்புணா்வு பேரணி

100% வாக்குப் பதிவு விழிப்புணா்வு பேரணி

பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்த ஐஓபி வங்கியின் சமூக பங்களிப்பு நிதி ரூ. 10 லட்சம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


