அரியலூரில் நாளை அரசு விழா: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு - இன்று ஜெயங்கொண்டம் வருகை
அரியலூரை அடுத்த கொல்லாபுரத்தில் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஜெயங்கொண்டம் வருகிறாா். விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அரியலூரை அடுத்த கொல்லாபுரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள விழாவுக்கான ஏற்பாடுகளை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.







