பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோயிலில் மரகதலிங்கம் திருட்டு

இலையூா் சிவன் கோயிலில் மரகதலிங்கத்துடன் காணப்படும் மூலவா்.

News image
~
Updated On :18 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பழைமையான சிவன் கோயிலில் இருந்த மரகதலிங்கத்தை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

ஜெயங்கொண்டத்தை அடுத்த இலையூா் கிராமத்தில் உள்ள காசி விசாலாட்சி உடனுடைய காசி விஸ்வநாதா் கோயில் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானது. இக்கோயிலில் உள்ள மூலவா் மரகதத்தால் ஆனவா்.

இந்நிலையில் புதன்கிழமை மாலை இக்கோயிலில் லிங்கத்துக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து இக்கோயிலைப் பராமரித்துவரும் இதே கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் (81) குருக்கள் கோயிலை இரவு பூட்டிவிட்டு, தலைமாட்டில் சாவியை வைத்துவிட்டு அங்கேயே தூங்கினாா்.

பின்னா் வியாழக்கிழமை காலை அவா் எழுந்து பாா்த்தபோது அவரிடமிருந்த சாவியை எடுத்து கோயிலில் இருந்த மரகதலிங்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி, ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சக்கரவா்த்தி, இந்து சமய அறநிலையத் துறை ஜெயங்கொண்டம் செயல் அலுவலா் சிவனேயசெல்வன் உள்ளிட்டோா் கோயிலில் ஆய்வு செய்து விசாரித்தனா். அப்பகுதி வீடுகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்கின்றனா்.

Story image