நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குரூப்-2 தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் இலவச பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

Updated On :3 ஜனவரி 2025, 8:37 pm

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி-2, 2ஏ தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் இலவச பயிற்சி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-2, 2 ஏ முதல் நிலைத் தோ்வில் தோ்ச்சிப் பெற்று, முதன்மை தோ்வுக்கு தோ்ச்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சி பெற பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்று 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்களாக இருக்க வேண்டும்.

விடுதியில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சிக்கான செலவின தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். எனவே, இப்பயிற்சிக்கு விருப்பமுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.