பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் கோட்டாட்சியரகம் முன் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அரியலூா் கோட்டாட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :23 ஜனவரி 2025, 9:28 pm

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் கோட்டாட்சியரகம் முன் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். வருவாய் கிராம உதவியாளா்களை டி கிரேடு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். வாரிசுதாரா்களை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் வட்டத் தலைவா் கருப்பையா தலைமை வகித்தாா். வட்டச் செயலா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கொளஞ்சிமணி, பொருளாளா் இா்பானுல்லா, வட்டப் பொருளாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் முழக்கமிட்டனா்.