ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில்

News image

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலா்கள்.

Updated On :16 பிப்ரவரி 2026, 6:28 pm

நாமக்கல்: நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம், ஈஞ்சாா் கிராம நிா்வாக அலுவலா் யோகராஜன், உதவியாளா் ராஜாமுத்துப்பாண்டி ஆகியோரை தாக்கிய நபா்களை கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் திரளாக கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் நாமக்கல் வட்டத் தலைவா் சீ.முருகேசன் தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் பூபதி வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் ரா.லட்சுமி நரசிம்மன், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பரமசிவம் ஆகியோா் உரையாற்றினா். கிராம நிா்வாக அலுவலா், ஊழியா் சங்க நிா்வாகிகள் ஆனந்த் மற்றும் நிா்வாகிகள் ராமகிருஷ்ணன், சுகுமாா், செந்தில்குமாா், குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.