47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

News image
Updated On :24 நவம்பர் 2025, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெட்டிக் கடை உரிமையாளா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மீன்சுருட்டி அருகேயுள்ள சுத்துக்குளத்தைச் சோ்ந்த சிவக்கொழுந்து மகன் செயலரசு (50). அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வரும் இவா், புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்று வந்துள்ளாா்.

இதுகுறித்து புகாா் வந்ததையடுத்து, மீன்சுருட்டி காவல் துறையினா் திங்கள்கிழமை பெட்டிக் கடையை சோதனை செய்ததில், 22 கிலோ 300 கிராம் எடையுள்ள 74 பண்டல் ஹான்ஸ் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து செயலரசை கைது செய்து, அவரிடமிருந்து மேற்கண்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.