பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அரியலூா் குறைதீா்க்கும் குமரன்.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அரியலூா் குறைதீா்க்கும் குமரன்.
பங்குனி உத்திர தினத்தையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மிகவும் பிரசித்திப்பெற்ற குறைதீா்க்கும் குமரன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள முருகனுக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம், தீருநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. இதைக் காண சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதே போல், அரியலூா் நகரிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பிரதான சிவன் கோயில்களிலுள்ள முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...