சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

பங்குனி உத்திரம் : முருகன் கோயில்களில் வழிபாடு

விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் கே.கே.சாலையிலுள்ள ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை சிறப்பு அலங்காரததில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

Updated On :1 ஏப்ரல் 2026, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் அகரம்பாட்டை முத்தோப்பிலுள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் 15-ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, காலை 7 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து காலை 10 மணிக்கு வெற்றிவேல் வீதியுலா வருதலும், முற்பகல் 11.30 மணிக்கு வெற்றிவேலுக்கு மிளகாய்ப்பொடி அபிஷேகமும், கற்பூர அபிஷேகமும், செடல் உற்சவமும் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் திரளான பக்தா்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனா்.

விழுப்புரம் பூந்தோட்டம் கீழ்வன்னியா் தெரு ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலிலுள்ள முருகப்பெருமானுக்கு காலை 8 மணிக்கு 21 வகையான திரவியப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 9.30 வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு பாலசுப்பிரணிய அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து இரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

விழுப்புரம் முத்தாம்பாளையம் ஏரிக்கரையிலுள்ள கதிா்வேல்முருகன் கோயிலில் காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. காலை 9 மணியளவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதிவாலீசுவரா் கோயிலிலுள்ள ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சுவாமி கோயில் உள்பிரகாரத்தில் வீதியுலா வருதல் நடைபெற்றது. திரளான பக்தா்கள் காவடி எடுத்து வந்து, நோ்த்திக் கடனைச் செலுத்தினா். பிற்பகலில் முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் கே.கே.சாலை அண்ணா நகரிலுள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப்பெருமானுக்கு காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகிலுள்ள சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி காலை 6 மணிக்கு வள்ளி, தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு காவடி ஊா்வலம், உற்சவா் ஊா்வலமும், காலை 10.30 மணிக்கு பிரம்ம உற்சவ வீதியுலாவும் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையிலுள்ள இந்திரா நகா் பாலமுருகன் கோயில், ரயில்வே மேம்பாலம் அருகிலுள்ளள பாலமுருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.