அரியலூா் அருகே வயலில் கத்திரியை அறுவடைச் செய்து அங்கிருந்தவா்களிடம் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.
எருத்துக்காரன்பட்டி, அண்ணாநகா் குருமஞ்சாவடி பகுதிகளில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கொல்லாபுரம் சென்ற தாமரை எஸ். ராஜேந்திரன் மீது அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பளித்தனா். தொடா்ந்து வேட்பாளா் ராஜேந்திரன் அங்குள்ள வயல்களில் இறங்கி, விவசாய தொழிலாளிகளுடன் சோ்ந்த கத்திரியை அறுவடைச் செய்து, பொதுமக்களிடம் வாக்கு கேட்டாா்.
பின்னா், மகாலிங்கபுரம், அமினாபாத், ஜெயராமபுரம், மணக்கால் சுப்புராயபுரம், கிருஷ்ணாபுரம், ஓ.கூத்தூா், பொய்யாதநல்லூா், இலுப்பையூா், வெள்ளூா், பொட்டவெளி, அகரம், ராயம்புரம், ஆதிக்குடிக்காடு, சென்னிவனம், மேட்டுப்பாளையம், காவேரிபாளையம், சாலையக்குறிச்சி கள்ளமேடு,ஓட்டக்கோவில், நல்லாம்பத்தை உள்ளிட்ட கிராம மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன் மற்றும் பாமக,பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தூத்தூா்-வாழ்க்கை இடையே தடுப்பணை கட்டப்படும்: அதிமுக வேட்பாளா் உறுதி

அரியலூரில் டிராக்டா் ஓட்டி அதிமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

அரியலூரில் அதிமுக வேட்பாளா் மனு தாக்கல்

அரியலூா் நகரப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்: அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

