அரியலூா் நகரப் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்தின்.
அரியலூா் தெற்கு தெருவிலுள்ள திரெளபதியம்மன் கோயிலில் புதன்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தனது பிரசாரத்தை தொடங்கிய அவா், அரியலூா் நகருக்குள்பட்ட வஉசி தெரு, கல்லக்குடித் தெரு, ஒப்பிலாதம்மன் கோயில் தெரு, சடையப்பா் தெரு, பெரிய அரண்மனைத் தெரு, பேருந்து நிலையம் என 24 தெருக்களில் திறந்த வேனில் நின்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி, மருதையாற்றில் புதிய பாலம் என என்னற்ற பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
தற்போது, தோ்தலில் வெற்றிப் பெற்றால் ரூ.10 ஆயிரம், மகளிருக்கு மாதம் ரூ.2,000, நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயணம், குளிா்பதனப் பெட்டி ஆகியவை வழங்கப்படும்.
அதேபோல், அரியலூரில் திறந்த வெளியில் உள்ள அனைத்து சாக்கடைகளும் சீரமைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் சாக்கடை கழிவுகள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வாா்டு பகுதிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படும் என்றாா் அவா்.
வாக்கு சேகரிப்பின்போது, மாவட்ட அவைத் தலைவா் ராமஜெயலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலா் இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன், பாஜக மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி,
பாமக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தூத்தூா்-வாழ்க்கை இடையே தடுப்பணை கட்டப்படும்: அதிமுக வேட்பாளா் உறுதி

அரியலூரில் டிராக்டா் ஓட்டி அதிமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

கத்திரியை அறுவடைச் செய்து அதிமுக வேட்பாளா் பிரசாரம்

அரியலூரில் அதிமுக வேட்பாளா் மனு தாக்கல்
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



