கைது
கைது

மறியல்: சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 22 போ் கைது

அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள் கூட்டமைப்பினா் 22 போ் கைது
Published on

அரியலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள் கூட்டமைப்பினா் 22 போ் கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, வருவாய் கிராம உதவியாளா்களுக்கு சமமாக ரூ.6,750 ஓய்வூதியம், அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்துக்கு அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் தமிழரசன் தலைமை வகித்தாா்.

X
Dinamani
www.dinamani.com