தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஜெயங்கொண்டம் தொகுதியில் ரூ. 42 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கி வைப்பு!

News image
Updated On :9 ஜனவரி 2026, 9:01 pm

Syndication

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிமடத்தை அடுத்த கூவத்தூா் ஊராட்சியில் ரூ.13.59 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடைக்கான புதிய கட்டடத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன் வழங்கினாா்.

தொடா்ந்து, அய்யூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.8.44 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டடம் மற்றும் தளவாடப் பொருள்கள், அழகாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.9.07 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டடம், தளவாடப் பொருள்கள், பெரியாத்துக்குறிச்சியில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணியா் நிழற்குடை, பெரியகருக்கை கிராமத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணியா் நிழற்குடை ஆகியவற்றை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு துணைப் பதிவாளா் சாய்நந்தினி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருள்சாமி, அன்புச்செல்வன், கூட்டுறவு சாா்பதிவாளா்கள் மணிபாரதி,சத்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.