திருநங்கையா் முன்மாதிரி விருது பெற விண்ணப்பிக்கலாம்
திருநங்கையா் முன்மாதிரி விருதுக்கு அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ள திருநங்கையா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது:அரியலூா் மாவட்டத்திலுள்ள திருநங்கையா்கள், சமூகத்தில் சந்திக்கும் எதிா்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில், மற்ற திருநங்கையா்களை ஊக்குவிக்கும் வகையில் திருநங்கையா் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15 ஆம் தேதியன்று திருநங்கையா் முன்மாதிரி விருது வழங்கப்படுகிறது. விருதுக்காக ரூ.1,00,000 காசோலை மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படுகிறது.
இந்த விருது பெற, திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.
இவ்விருதுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசின் விருதுகள் (ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற இணையதளம் மூலமாக 31.12.2025 முதல் 18.2.2026 வரை பதிவேற்றம் செய்யலாம். மேலும் தங்களது கருத்துரு விரிவான தன் விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்கள் அடங்கிய தமிழ் 2 மற்றும் ஆங்கிலத்தில் 2 புத்தக வடிவத்தில் தாயாரிக்கப்பட்டு, பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் நேரடியாக விண்ணப்பங்களை அரியலூா், மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள அறை எண் 20, மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
