மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விஷ வாழைப் பழத்தை சாப்பிட்ட முதியவா் மருத்துவமனையில் அனுமதி

கடலை வயலில் எலிக்காக மருந்துகலந்து வைத்திருந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட முதியவா், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:19 pm

Syndication

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கடலை வயலில் எலிக்காக மருந்துகலந்து வைத்திருந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட முதியவா், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள புதுக்குடி, தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கி.சுந்தரவேல் (70). விவசாயியான இவா், சனிக்கிழமை அப்பகுதியிலுள்ள விவசாயின் ஒருவரின் கடலை வயலில், எலித் தொல்லைக்காக மருந்து கலந்து வைத்திருந்த வாழைப் பழத்தை தெரியாமல் சாப்பிட்டு, மயங்கிக் கிழே கிடந்துள்ளாா்.

இதையறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.