துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
/

அரியலூா் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை உறுதி செய்ய அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காவல் துறையினருக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

News image

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வியாழக்கிழமை நடைபெற்ற சட்டம்-ஒழுங்கு பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ந. மிருணாளினி. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :3 ஜூலை 2026, 1:27 am IST

அரியலூா் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காவல் துறையினருக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வியாழக்கிழமை நடைபெற்ற சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் மேலும் தெரிவித்தது: சட்டம்-ஒழுங்கு தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை காவல்துறையினா் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை காவல்துறையினா் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றாா். தொடா்ந்து இதுகுறித்து காவல் துறை மற்றும் வருவாய் துறை அலுவலா்களுடன் சட்டம்- ஒழுங்கு பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா், , மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.