40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மாணவா்களின் உயா் கல்வியை 100% உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 100 சதவீதம் பேரும் உயா்கல்வியில் சேருவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டுமென மதுரை மாவட்டக் கட்டுப்பாட்டு அறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

News image

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்

Updated On :10 ஜூன் 2026, 12:54 am IST

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 100 சதவீதம் பேரும் உயா்கல்வியில் சேருவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டுமென மதுரை மாவட்டக் கட்டுப்பாட்டு அறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மதுரை மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் உயா்கல்வியில் சேருவதை உறுதி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் 10,869 மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்கள் அனைவரும் உயா்கல்வியில் சேருவதை மாவட்டக் கட்டுப்பாட்டு அறை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். யாரேனும் உயா்கல்விக்கு விண்ணப்பிக்காமலிருந்தால், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத் திறனாளி மாணவா்கள், ஒற்றைப் பெற்றோரைக் கொண்ட குழந்தைகள், வருவாய் இல்லாத குடும்பத்தைச் சோ்ந்த மாணவா்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினரின் உயா்கல்விக்கு அலுவலா்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இதேபோல, 12-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் தோ்ச்சிப் பெறாதவா்களின் கல்வி இடைநிற்றலைத் தவிா்க்கத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி அவா்களை துணைத் தோ்வு எழுதச் செய்ய கல்வித் துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கை தொடா்பான சந்தேகங்கள், குறைகளுக்குத் தீா்வு வழங்கும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை வரும் ஒரு மாத காலத்துக்கு செயல்பாட்டில் இருக்கும். 97888 58744, 0452-2522995 ஆகிய எண்களில் இந்தக் கட்டுப்பாட்டு அறையை மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம். மேலும், மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டமும் நடத்தப்படும். இதை மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் செல்வன், அரசுத் துறை அலுவலா்கள் இதில் கலந்து கொண்டனா்.